தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்படாது - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2023

தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்படாது - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக துணை

வேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார்.


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில வழியில் பொறியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ் வழியிலான இயந்திரவியல், கட்டிடவியல் பாடப் பிரிவுகளில் சமீபகாலமாக மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதையடுத்து 11 உறுப்புக் கல்லூரிகளில், சேர்க்கை குறைந்த பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.


இதையடுத்து தமிழ்வழி பாடப் பிரிவுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அதன் துணைவேந்தர் ஆர்.வேல் ராஜ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழ்வழி பாடப்பிரிவுகளில் 10-க்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள கல்லூரிகளில் தற்காலிகமாக சேர்க்கையை நிறுத்திவைக்க ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவானது. தமிழ்வழி படிப்புகளை நீக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. பொறியியல் படிப்புகளில் இயந்திரவியல், கட்டிடவியல் பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் புதிய பாடங்களை அறிமுகப்படுத்தவும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. அதை சிலர் தமிழ்வழிக் கல்வியை புறக்கணிப்பது போல் தவறாகப் புரிந்து கொண்டனர்.


தற்போது உயர்கல்வித் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி 11 உறுப்புக் கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகள் நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பு திரும்பப்பெறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கு ஆர்வம் காட்டப்படுவதால் சில கல்லூரிகளில் சேர்க்கை இடங்களை அதிகரித்துள்ளோம்.


அனைத்து பாடப் புத்தகங்களையும் தமிழில் மாற்ற ஏஐசிடிஇ நிதி அளித்துள்ளது. இந்த பணி முடிந்தவுடன் அனைத்து பொறியியல் பாடப்பிரிவுகளும் தமிழ் மொழியிலும் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. நல்லது, எல்லா பொறியியல் மட்டும் மருத்துவ கல்விகள் தமிழ்வழி நிகழும் காலத்தை தள்ளிப்போடாமல் விரைந்து நிகழ தமிழ்த்தாய் அருளட்டும் தமிழே, இனிய நன்றி உரித்தாகுக

    ReplyDelete
  2. இளங்கலை வேளாண்மை வகுப்பு தமிழ்வழி ஏற்கனவே அண்ணா பல்கலை சில ஆண்டுகள் பட்டங்களை வழங்கியது!
    அதை இயல் காரணம்காட்டி கைப்பற்றியபின் ஏன் தமிழ்வழி இளங்கலை வேளாண்மை (Agricultural & Irrigation Engg) பட்டப்படிப்பை தொடரவில்லை தமிழே, தொடர ஆவண செய்யுங்கள் உழவர் பெருமக்கள் வளம் பெருகும் தமிழே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி