ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் நடந்தது; 11 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை, மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பெறும் ஒவ்வொரு உயர் கல்வி தகுதிக்கும், இரண்டு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களின் பணிக் காலத்தை அடிப்படையாக வைத்து, பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை, அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும்.
இல்லையெனில், அடுத்த மாதம் 28ம் தேதி காலை, 11:00 மணிக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி