ஆசிரியர்கள் பதவி உயர்வு பணிகள் மீண்டும் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2023

ஆசிரியர்கள் பதவி உயர்வு பணிகள் மீண்டும் துவக்கம்

 

பள்ளிக் கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பதவி உயர்வை, மீண்டும் வழங்குவதற்கான பணிகள் துவங்கி உள்ளன.


கடந்த ஓராண்டாக, பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான பதவி உயர்வுகள், பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.


நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசின் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மட்டும், பதவி உயர்வு வழங்கப்பட்டது.


இந்நிலையில், மீண்டும் பதவி உயர்வு வழங்கும் பணி துவங்கி உள்ளது. முதற்கட்டமாக மூன்று தலைமை ஆசிரியர்களுக்கு, டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கி, பள்ளிக்கல்வித் துறை புதிய இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டு உள்ளார்.


இதையடுத்து, படிப்படியாக அனைத்து வகை பதவிகளுக்கும், பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. Tet தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் உடனடியாக தீர்வு காண்க.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி