மாணவர்கள் படிப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், கல்வி வளர்ச்சியில் தமிழகம் நாட்டிலேயே 2வது இடத்தில் உள்ளது. கருணாநிதியால் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி விகிதம் பெருமளவு உயர்ந்துள்ளது.
காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் மகத்தான நலத் திட்டங்களை வகுத்து வருகிறோம். கல்வியில் தமிழகம் வகுத்த பல திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.
அனைத்துத்தரப்பு மக்களும் போற்றும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைவரும் படிப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி