ஐடிஐ முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று: அக்.3-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2023

ஐடிஐ முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று: அக்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்

 

ஐடிஐ படித்தவர்கள், மேற்படிப்புக்காக 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விரும்பினால் வரும் அக்டோபர் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்தாண்டு மார்ச் 30-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள், மேற்படிப்பை தொடர 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்றஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தற்போது அகில இந்திய தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின்கீழ் நடத்தப்பட்ட மொழித் தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 10-ம் வகுப்புமற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்துஉரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள பொறுப்பு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ தபால்மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஆய்வு செய்து, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள்இயக்ககத்தில் இருந்து தகுதிக்கேற்ப 10-ம் வகுப்பு / 12-ம்வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் இதற்கென நியமிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் வரும் அக். 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி