மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பெண்கள் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து விரைவில் அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 10ல் ஜாதவ்பூர் பல்கலையில் ராகிங் காரணமாக மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மேலும், கொல்கத்தாவின் தெற்கு புறநகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். சமீபத்தில் நடைபெற்ற இந்த சம்பவங்களையடுத்து கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
அரசு பெண்கள் பள்ளியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான செலவை மாநில அரசு ஏற்கும். அதேசமயம் தனியார்ப் பள்ளிகளை நிர்வகிக்கும் அதன் பொறுப்பாளர்கள் தான் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மட்டுமல்லாது அனைத்து பெண்கள் கல்லூரிகளிலும் சிசிடிவி கட்டாயமாக்கப்படும் என மாநிலக் கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஜாதவ்பூர் பல்கலையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால் பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டனர். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் 26 சிசிடிவி கேமராக்களை பொறுத்த அப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
காப்பகத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி