எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளை எளிதாக வீட்டில் இருந்து செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் வழிமுறைகள்:
மத்திய அரசு அனைத்து குடிமக்களையும் நாட்டின் அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் அட்டையை இணைப்பதற்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் தொடர்பான தரவுகள் அனைத்தும் அரசுடன் இணைக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் ஆதார் எண்ணை வங்கியின் உடன் இணைப்பதற்கு கட்டாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் இதை நிறைவேற்றாமல் உள்ளனர்.
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையை இணைப்பதற்கு ஆன்லைன் வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக எளிதாக வீட்டில் இருந்தபடியே தங்களது சேவைகளை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம்.
வழிமுறைகள்:
முதலில் எஸ்பிஐ வங்கியின் வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் இருந்து ஒரு எஸ் எம் எஸ் ஐ வங்கிக்கு அனுப்ப வேண்டும்.
UID <SPACE> ஆதார் எண் <SPACE> கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும்.
அதன் பிறகு 567676 என்ற தொலைபேசி எண்ணுக்கு செய்தியை அனுப்ப வேண்டும்.
உங்கள் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் பான் கார்டுடன் உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். இதன் மூலம் உங்கள் KYC சரிபார்ப்பை முடித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி