ஜாக்டோ ஜியோ - இன்றைய ( 14.12.2023 ) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2023

ஜாக்டோ ஜியோ - இன்றைய ( 14.12.2023 ) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: 14.12.2023

      💥 15 லட்சம் ஆசிரியர்கள்  அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில்  நடைபெற்றது.

        💥இன்றைய கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு வி.எஸ்.முத்துராமசாமி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் திரு அன்பரசு,தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் திரு சுரேஷ் ஆகிய மூன்று சங்க பொறுப்பாளர்கள் தலைமைதாங்கினர்.

        💥இன்றைய கூட்ட முடிவில் இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.

   ♦️(1) ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிகைகைகளை  நிறைவேற்ற  28.12.2023  வியாழக்கிழமை திட்டமிட்டபடி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துதல்.

♦️(2)சென்னையில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.


  💥கோரிக்கைகள்:

 🔥CPS திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.

🔥இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்

🔥சரண் விடுப்பு  ஊதியம், ஊக்க  ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

🔥காலிப்  பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும்.

🔥உட்பட கோரிக்கைகள்...

    💥இன்றைய கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோவில் இணைந்துள்ள 25 சங்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 

கலந்து கொண்டனர்......


1 comment:

  1. பகுதி நேர ஆசிரியர்கள் சொற்ப அளவே சம்பளம் வாங்கும் நிலை.இனி யாரிடம் சென்று முறையிடுவது? ஏற்றப்பட்ட 2500 ஓவாயும் இன்னும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சி நல்லது செய்யும் என்று நம்பிய எங்களை அதிமுக ஆட்சி மேல் என் சொல்ல வைக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்கிறார்கள். ஏமாற்றம். ஏமாற்றம். ஏமாற்றம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி