கோரிக்கைகளை வலியுறுத்தி 28ல் முற்றுகைப்போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2023

கோரிக்கைகளை வலியுறுத்தி 28ல் முற்றுகைப்போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

 

கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகைப் போராட்டம் 28ம் தேதி நடக்கும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்தனர். முன்னதாக கடந்த 8ம் தேதி முதல்வர் அமைத்த 3 நபர் குழுவினர் மேற்கண்ட சங்கத்தினரை அழைத்துப் பேசினர். அதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.

 இதையடுத்து அறிவித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், வரும் 28ம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்காக ஜாக்டோ-ஜியோ சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி