அரசு ஊழியர்களே ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2024

அரசு ஊழியர்களே ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு எப்போது?

 

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு இரு முறை என மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றனர். 


அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்க வேண்டிய இந்த அகவிலைப்படியை மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் உயர்த்தி அறிவித்தது. 


இதன் தொடர்ச்சியாக மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கினார்.

தற்போது வரை, பெரும்பாலான அரசு ஊழியர்கள் 46% வரை அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். 


இந்த ஆண்டுக்கான ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வானது, கடந்த மார்ச் மாத அறிவிப்பு போல் இல்லாமல் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும், இந்த அறிவிப்பில் அகவிலைப்படி ஆனது கூடுதலாக 4% அல்லது 5% அதிகரித்து சுமார் 50% அல்லது 51% ஆக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கவும் அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி