3,302 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: இறுதிகட்ட பணிகள் மும்முரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2024

3,302 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: இறுதிகட்ட பணிகள் மும்முரம்

 

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ம்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் தேர்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தேர்வை 7.15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத்தேர்வு குளறுபடியின்றி முறையாக நடைபெற ஏதுவாக பல்வேறு முன்னேற்பாடுகள் தேர்வுத் துறையால் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மட்டும் தலா 3,302 தேர்வு மையங்களும்,10-ம் வகுப்புக்காக 4,107 மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


இது கடந்த ஆண்டைவிட அதிகம். முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி