ஆசிரியர் வீட்டுக்கும் , பணிபுரியும் பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம் ? பள்ளிக்கல்வித்துறை விவரங்களை சேகரிக்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2024

ஆசிரியர் வீட்டுக்கும் , பணிபுரியும் பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம் ? பள்ளிக்கல்வித்துறை விவரங்களை சேகரிக்கிறது

 

அரசு பள்ளி ஆசிரியர்கள் . அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து 8 கி.மீ. தொலைவுக்குள் இருந்து பணிக்கு வர வேண் டும் என்ற விதி நடைமுறையில் இருந்து வருகிறது . ஆனால் இந்த நடைமுறை பெரும்பாலான இடங்களில் பின்பற்றுவதே கிடையாது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.


இந்த நிலையில் பள்ளி , கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி , இன வேறுபாடுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்த்து , நல்லிணக்கம் பேணுவதற்கான வழிமுறைகளை வகுத்து , அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணை யத்தை தமிழ்நாடு அரசு அமைத்து உத்தரவிட்டது . அதன்படி , இந்த ஒருநபர் ஆணையத்தின் பள்ளிக்கல்வித் துறைக்கு சில விவரங்கள் கேட்டு வேண்டுகோள் விடுத்திருக் கிறது . அதன்படி , ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் பணியாற் | றும் ஆசிரியர்களின் பெயர் . அவர்களின் வீட்டுக்கும் , பள்ளிக் கும் இடையே 8 கி.மீ. தூரத்துக்குள் வசிப்பவர்கள் யார் ?, 8 கி.மீ. தூரத்துக்கு மேல் இருந்து பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் யார் ?, அவர்களின் இருப்பிட முகவரி ஆகியவை அடங்கிய விவரங்களை ஆசிரியர்களிடம் இருந்து கேட்டு பெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.


 இதுகுறித்து ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது , ' மாண வர்கள் மட்டுமல்ல , ஆசிரியர்கள் கூட ஒரே சாதிய ரீதியிலான நடவடிக்கையில் ஈடுபடுவதும் அவ்வப்போது நடக்கிறது . சில பள்ளியில் ஒரே சாதியை சேர்ந்த ஆசிரியர்கள் . தலைமை ஆசிரியர் என குழுவாக செயல்படுவதையும் பார்க்க முடி கிறது . இதனை களைய இந்த விவரங்கள் கேட்கப்பட்டு இருக்க லாம் ' என்று கூறினார்கள்.



1 comment:

  1. இவ்வளவு அப்பாவியா இருக்கிறீர்கள்.. அவர்கள் ஜாதி காக கேக்கவில்லை.. வீடு தூரத்தின் அடிப்படையில் உங்களின் HRA DA கணக்கிடப்படும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி