தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பணியிடம் உருவாக்குதல் - DSE செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2024

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பணியிடம் உருவாக்குதல் - DSE செயல்முறைகள்!

2017-18, 2018-19 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பணியிடம் உருவாக்குதல் - DSE செயல்முறைகள்!

DSE - Computer Teacher Post - Proceedings👇

Download here


தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க 08.07.24 நாளிட்ட கடிதத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்டுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் வழங்கக் கோரிக்கை பெறப்பட்டுள்ளது.


 2017-18 , 2018-19 , 2023-24 ஆகிய கல்வி ஆண்டுகளில் உயர்நிலை பள்ளிகளில் இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை . ஆனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவு நடைபெற்று வருகிறது எனத் தெரிய வருகிறது.


 எனவே , மேற்கண்ட ஆண்டுகளில் தொடங்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினிப் பிரிவில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சார்பான விவரங்களை இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட அளவில் இணை இயக்குநர் ( மேல்நிலைக்கல்வி ) அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு idhscose@tnschools.gov.in உடனடியாக அளிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி