ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2024

ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 

பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-


தமிழக முதல்-அமைச்சர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றி தரப்படும்.


பள்ளியின் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவை முற்றிலும் தடுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் முறையில் தலைமை பண்பை வளர்க்கின்ற விதமாக மாதிரி சட்டமன்றம், மாதிரி நாடாளுமன்றம் ஒவ்வொரு பள்ளிக்கும் கொண்டு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.


பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரிபவர்கள் மீது புகார்கள் வந்தால் அவற்றில் உண்மை, தன்மை இருக்கின்றபட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

15 comments:

  1. But politicians ku statue vaikirathu matum immediate ah nadakum.. athukulam government la fund irukum... teachers appointment ku matum fund irukathu

    ReplyDelete
  2. விரைவில் என்ற வார்த்தையை கண்டுபிடித்தது தி.மு.க - காரன் தான். முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்பது அவ்வளவு ஒரு கடினமான செயல் அல்லவா !!! இப்படியே 2026 வரை ஓட்டிவிட்டு செல்லுங்கள். மற்றொரு முறை ஆட்சியை பிடிப்பது தி.மு.க - விற்கு குதிரை கொம்பு தான்.. சிந்தனையில் வையுங்கள்..

    ReplyDelete
  3. விரைவில் என்பது உமக்கு சூப்பர் வசனம்

    ReplyDelete
  4. காமெடிசார்

    ReplyDelete
  5. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  6. நீ இப்படியே பொய்யா சொல்லிட்டே திரி

    ReplyDelete
  7. நான்கு வருடமாக சொல்கிற வார்த்தை இனி திமுக வை நம்புவது மண் குதிரை ரேஸ்க்கு போன கதை

    ReplyDelete
  8. துணை முதலமைச்சர் என்ன தாங்கள் பார்க்க முடியாத அளவிற்கு வெகு தொலைவிலா இருக்கிறார். வாரத்துக்கு ஒரு முறையாவது தாங்கள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் அவருக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட நீங்கள் அப்படி இருக்கையில் நம் துறை சார்ந்த பிரச்சினைகளை ஒரு முறையாவது இதுவரைக்கும் தாங்கள் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து சொல்லும்படி ஏதாவது செய்திருக்கிறீர்களா? இப்படியே கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் போதுமையா சாமி. ஆகச்சிறந்த கல்வி அமைச்சர் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  9. யார் யாரோ முதல்வரை சந்தித்து மாலையுடன் போட்டோவிற்க்கு போஸ் கொடுக்கிறார்கள் ஆனால் ஆசிரியர் மற்றும் ஆசிரிய சங்கத்திற்க்கு மட்டும் முதல்வரை சந்திக்க முடிவதில்லை
    எனக்கொன்றும் விளங்களீங்க
    நாங்க வேனும் னா கூட்டமா தற்கொலை பன்னிக்கிட்டுங்களா

    ReplyDelete
  10. கணினி ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா..

    ReplyDelete
    Replies
    1. kandipa nadakathu brother... namma solrathulam avanungaluku thoosi mathiri... Kanini asiriyar ku pathila kalaignar asiriyar nu namma department ku name mathuna kandipa kedaikum nu nenaikiren

      Delete
  11. Special teachers pending posting podunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி