TRUST - கல்வி உதவித்​தொகைக்கான ஊரக திறனாய்வு தேர்வு: ஹால்டிக்கெட் இன்று வெளி​யீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2024

TRUST - கல்வி உதவித்​தொகைக்கான ஊரக திறனாய்வு தேர்வு: ஹால்டிக்கெட் இன்று வெளி​யீடு

ஊரகத் திறனாய்​வுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்​களுக்கான ஹால்​டிக்​கெட் இன்று (டிச. 9) வெளி​யிடப்பட உள்ளது. இதுகுறித்து தேர்​வுத்​துறை இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதிகாரி​களுக்​கும் (சென்னை தவிர) அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை:


தமிழகத்​தில் கிராமப்புற மாணவர்களை ஊக்கு​விப்​ப​தற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்​டத்​தின் கீழ் கல்வி உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வருகிறது. அதன்படி பள்ளி​களில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்​வெழுத தகுதி பெற்​றவர்​களாவர். இந்த திட்​டத்​தின்​கீழ் ஒவ்வொரு மாவட்​டத்​தி​லும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்​யப்​பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகள் வழங்​கப்​படும்.


அந்த வகையில் நடப்​பாண்​டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்​ணப்பப் பதிவு நவ. 12-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி​யுடன் நிறைவு பெற்​றது. இந்த தேர்​வெழுத விண்​ணப்​பித்த மாணவர்​களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் மற்றும் ஹால்​டிக்​கெட்கள் www.dge.tn.gov.in எனும் வலைத்​தளத்​தில் பதிவு செய்யப்​பட்​டுள்​ளது. இவற்றை தேர்வு மைய கண்காணிப்​பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்​து கொள்​ளலாம்.


அதேபோல், ஹால்​டிக்​கெட்​டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்​பம், பள்ளி முத்​திரையிட்டு வழங்க வேண்​டும். மாணவர்​களுக்கு தேர்வு மைய விவரத்தை​யும் தெளிவாக கூற வேண்டும்.


ஹால்​டிக்​கெட்​களில் ஏதேனும் பிழைகள் இருப்​பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமை​யாசிரியர் சான்​றொப்பமிட வேண்​டும். இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கும் தெரி​வித்து உரிய முன்னேற்​பாடுகளை அந்​தந்த ​மாவட்ட முதன்​மைக் கல்வி அதிகாரி​கள் மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

1 comment:

  1. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு புவியியல் பிரிவில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆன்லைன் தேர்வு
    https://tamilmoozi.blogspot.com/2024/12/blog-post.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி