பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் விபரங்களை, பிப்ரவரி, 17க்குள், யு.டி.ஐ.எஸ்.இ., என்ற, மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின், மாநில திட்ட இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம், நாட்டில் உள்ள பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களை மேம்படுத்தும் வகையில், அவை குறித்த தரவுகளை, யு.டி.ஐ.எஸ்.இ., என்ற இணையதளத்தில் சேகரிக்கிறது.
அந்த வகையில், 2024 - 2025ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் சார்ந்த தரவுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த விபரங்களை, பிப்ரவரி, 17ம் தேதிக்குள் யு.டி.ஐ.எஸ்.இ., இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவர்களின் வகுப்பு, பிரிவு, பொது விபரங்கள், வழங்கப்படும் நலத்திட்டங்கள், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் விபரங்களையும், பள்ளி அறைகளில் உள்ள உள் கட்டமைப்பு விபரங்களையும், விரைவாக பதிவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி