ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2025

ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்

 

முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவில் 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிலவரம் குறித்த ஆய்வு தமிழகத்தில் 30 மாவட்​டங்​களில், 876 கிராமங்​களில் 3 - 16 வயது வரையிலான 28,984 மாணவ, மாணவியரிடையே மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.


இதில் 35 சதவீதம் 8-ம் வகுப்பு மாணவ, மாணவியர்​களால் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க முடிய​வில்லை. 64 சதவீதம் 5-ம் வகுப்பு மாணவ, மாணவி​களால் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க இயலவில்லை என கூறப்​பட்​டுள்​ளது. மேலும், 12 சதவீதம் 3-ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் மட்டுமே 2-ம் வகுப்பு பாடங்களை படிக்​கின்​றனர் என்றும் அந்த ஆய்வு குறிப்​பிடு​கிறது.


உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களை விட தமிழ்​நாடு பின்​தங்கி இருப்​பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கு, ஆசிரியர் பணியிடங்கள் அவ்வப்​போது முறையாக நிரப்​பப்​படாதது, ஆயிரக்​கணக்கான பள்ளி​களில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்​பது, சமவேலைக்கு சம ஊதியம் அளிக்​காதது தான் காரணம். எனவே மாணவ, மாணவியகளின் நலனைக் கருத்​தில் கொண்டு, ஆசிரியர் காலிப் பணியிடங் களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

11 comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. ADMK DMK waste posting Panna maatanka

    ReplyDelete
  3. Case file panni posting pannama irukirathey ADMK and DMK

    ReplyDelete
  4. இந்த அரசு நம்பிக்கை துரோகம் செய்கிறது

    ReplyDelete
  5. நீங்க ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்களோ, அதை தான் திமுக வினர் செய்கிறார்கள், அவர்கள் அன்று பேசியதை நீங்கள் இன்று பேசுகிறீர்கள், உங்களுக்கு அப்படி ஒரு ஒற்றுமை

    ReplyDelete
  6. Part time 12+ years atleast engalavdhu permenent pannuga ...plz...just 12500 tha vangurom...

    ReplyDelete
  7. Part time teachers & tet 2013 for example,,,,

    ReplyDelete
  8. As a 2013 Tet qualifier I just ignore the opportunities of working InTN Govt school as temporary teacher. So that our govt may fill the posts...
    But lose hope😡😭

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி