சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2025

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்

சிவில் சர்வீஸ் முதல்​நிலை தேர்வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நாளை முடிவடைகிறது.


ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவி​களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்​வாணையம் (யுபிஎஸ்சி) சார்​பில் ஆண்டு​தோறும் குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்​வுகள் நடத்​தப்​படு​கின்றன. முதல்​நிலை, முதன்மை, நேர்​காணல் என மொத்தம் 3 கட்டங்​களாக இத்தேர்​வுகள் நடைபெறும். இதில் தேர்​வர்கள் பெறும் மதிப்​பெண்​களின் அடிப்​படை​யில் இறுதி முடிவுகள் வெளி​யிடப்​படும்.


இந்நிலை​யில், நடப்பு ஆண்டில் 979 காலி பணியிடங்களை நிரப்பு​வதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளி​யிட்​டது. முதல்​நிலை தேர்வு மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்​ணப்ப பதிவு ஜனவரி 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நாளை​யுடன் (பிப்​ரவரி 21) நிறைவு பெறுகிறது.


விருப்பம் உள்ள பட்ட​தா​ரிகள் https://upsc.gov.in எனும் வலைதளத்​தில் விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்​பத்​தில் திருத்தம் இருந்​தால் பிப்​ரவரி 22 முதல் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்​கப்​படும் என்று ​யுபிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி