Mar 12, 2025
புதிய பயிற்சி அளித்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்களுக்கு தேர்வு?
ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய பயிற்சி அளித்து தேர்வு நடத்த வேண்டும் என்று சுதா மூர்த்தி எம்பி பேசினார். மாநிலங்களவை நியமன உறுப்பினரும், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மனைவியுமான சுதா மூர்த்தி, கல்வி அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து அவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது: ஆசிரியர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நல்ல ஆசிரியர்கள் இல்லையென்றால் கல்வி முறை மேம்படாது. கல்லூரி அளவில் தேர்வில் தேர்ச்சி பெற்று, பி.ஏ., அல்லது எம்.ஏ., அல்லது பி.எச்.டி., படித்த பின் ஆசிரியர்கள் வேலையில் நுழைந்துவிடுகிறார்கள்.அதன்பின் அவர்கள் ஓய்வு பெறும் வரை தேர்வுகள் இல்லை.
இது நடக்கக்கூடாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதிய நுட்பம் அல்லது புதிய அறிவு தொடர்பான தேர்வு இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேற மாட்டார்கள். நல்ல ஆசிரியராக வேண்டுமானால் அதற்கும் ஒரு விலை உண்டு. விலை பணமல்ல, ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி, தேர்வு. இவ்வாறு அவர் பேசினார். தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவு எம்பி பவுசியாகான் இதற்கு ஆதரவு தெரிவித்தார்.
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றால் தான் நாடாளுமன்றத்திற்கு மற்றும் சட்டமன்றத்திற்கு செல்ல முடியும் என இருக்க வேண்டும்
ReplyDeleteதேர்தல்ல நிற்காமலே எம்.பி ஆனா அப்படிதான் யோசனை வரும். ஆரிய குசும்பு
ReplyDelete