மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு: மாணவர்கள் தாமதமின்றி விண்ணப்பிக்க அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2025

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு: மாணவர்கள் தாமதமின்றி விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

 

நீட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் மார்ச் 7-ம் தேதிக்​குள் முடிவடைய உள்ள நிலை​யில், மாணவர்கள் துரிதமாக விண்​ணப்​பிக்க வேண்​டும் என்று தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) அறிவுறுத்​தி​யுள்​ளது.


நாடு முழு​வதும் அரசு மற்றும் தனியார் மருத்​துவக் கல்லூரி​களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு​கள், சித்தா, ஆயுர்​வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்​துவப் படிப்​பின் அகில இந்திய ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்​தப்​படு​கிறது.


அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரி​களில் பிஎஸ்சி நர்சிங் படிப்​புக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்​படி, 2025-26-ம் கல்வி​யாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறை​யில் நடைபெற உள்ளது. இந்த தேர்​வுக்கான இணையதள விண்​ணப்பப் பதிவு கடந்த பிப்​ரவரி 7-ம் தேதி தொடங்​கியது. இதற்கான காலஅவ​காசம் மார்ச் 7-ம் தேதி​யுடன் நிறைவு பெறவுள்​ளது.


விருப்​ப​முள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற வலைத்​தளம் வழியாக விண்​ணப்​பிக்க வேண்​டும். இந்தப் பணிகளை இறுதிநாள் வரை தாமதம் செய்​யாமல், முன்​கூட்​டியே முடித்​தால் கடைசிநேர சிரமங்களை தவிர்க்​கலாம். ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்​ணப்​பிக்க வேண்​டும். நீட் தகுதித் தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்​வுக்கான ஹால்​டிக்​கெட் மே 1-ம் தேதி வெளி​யிடப்​படும்.


அதன் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளி​யிடப்​படும். தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் வழிமுறை​கள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்​தில் அறிந்து கொள்​ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்​பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்​சல் வாயிலாக தொடர்பு ​கொண்டு ​விளக்​கம் பெறலாம் என்று என்டிஏ வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி