‘நம்பவைத்து ஏமாற்றப்பட்டோம்’ - பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் அரசு மீது குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2025

‘நம்பவைத்து ஏமாற்றப்பட்டோம்’ - பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் அரசு மீது குற்றச்சாட்டு

திமுக ஆட்சியின் இந்த கூட்டத்தொடரை உறுதியாக நம்பி இருந்த பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது.


பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 2023-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் போராட்டம் நடத்திய பின்னர் ரூ.2,500 சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு 10 லட்சம் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2024-ம் ஆண்டு சம்பள உயர்வு 2,500 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டதால் ரூ.12,500 சம்பளம் வழங்கப்படுகிறது.


மே மாதம் சம்பளம் 2012-ம் ஆண்டு இந்த வேலைக்கு சேர்ந்தது முதல் இருந்து வழங்கப்படவில்லை. மேலும் வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, போனஸ் உள்ளிட்ட அரசு சலுகைகளும் இதுவரை கிடையாது.13 ஆண்டுகள் கடந்து தற்போது 14-வது ஆண்டிலும் இன்னும் தொகுப்பூதியத்தில் உள்ளதை இனிமேலாவது காலமுறை சம்பளத்திற்கு மாற்றினால் தான் அரசு சலுகைகள், பணி பாதுகாப்பு கிடைக்கும்.


சட்டசபையில் அனைத்து கட்சிகளும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியில் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்யாய்போனது. .


இந்நிலையில் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில சங்கத்தில் மாநிலத்தலைவர் ப.கீதா இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: திமுக ஆட்சியின் இந்த கூட்டத்தொடரை உறுதியாக நம்பி இருந்த பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எவ்வித அறிவிப்புமின்றி 12.000 குடும்பங்கள் பாழும் கிணற்றில் தள்ளப்பட்டது.


பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்து விட்டு வாக்குறுதியை (181)ஐ நிறைவேற்றாததால் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கும் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. விடியல் ஆட்சியில் நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள்.” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

9 comments:

  1. தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றும் உங்களுடைய ஆட்சியில் இன்னும் ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூட நிரப்ப வில்லை. இடைநிலை ஆசிரியர் நியமனம் ஏதும் இல்லை. எல்லா வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில். வீட்டுக்கு வீடு இவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் என்று சொல்லி விட்டு தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் சொன்னதைச் செய்வோம் என்று கூறும் இவர்கள் எதையும் செய்ய வில்லை.

    ReplyDelete
  2. இவ்வளவு மோசமான மனசாட்சி இல்லாத அரசை பார்க்க வில்லை. அடிப்படை வசதியின்றி ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் செத்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை????

    ReplyDelete
  3. தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றும் உங்களுடைய ஆட்சியில் இன்னும் ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூட நிரப்ப வில்லை. இடைநிலை ஆசிரியர் நியமனம் ஏதும் இல்லை. எல்லா வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில். வீட்டுக்கு வீடு இவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் என்று சொல்லி விட்டு தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் சொன்னதைச் செய்வோம் என்று கூறும் இவர்கள் எதையும் செய்ய வில்லை.

    ReplyDelete
  4. ஈவு இரக்கம் இல்லாமல் இருக்கும் இந்த ஆட்சிக்கு கடுமையான பிரச்சாரம் செய்த எல்லோரும் இப்போது வெட்கித் தலை குனிகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தூக்கில் தொங்குங்கள்

      Delete
  5. பி.எட் படித்த மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் எல்லோரும் ஏமாற்றப்பட்ட நிலையில் உள்ளனர்.

    ReplyDelete
  6. கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட் பட்டதாரி ஆசிரியர்கள் நம்பவைத்து ஏமாற்றப்பட்ட நிலையில் உள்ளனர்.

    ReplyDelete
  7. அடுத்த ஆட்சியில் முதலில் கட்டாயம் செய்வோம் என்று கூறினால் தேர்தல் பணி செய்யும் ஆட்டு மந்தை கூட்டங்கள்

    ReplyDelete
  8. அடுத்த ஆட்சியில் முதலில் கட்டாயம் செய்வோம் என்று கூறினால் தேர்தல் பணி செய்யும் ஆட்டு மந்தை கூட்டங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி