மாணவன் விபரீத முடிவு - பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2025

மாணவன் விபரீத முடிவு - பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பரமன்குறிச்சி அருகே ஆசிரியர் அடித்ததால் பள்ளி மாணவன் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை .. திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ( 15 ) . பரமன்குறிச்சி கே.கே.ஆர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

 பள்ளியில் ஆசிரியர்கள் நேற்று மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது . இதையடுத்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன் தனது பெற்றோரிடம் ஆசிரியர்கள் தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளார் .

 இதனால் பெற்றோர்கள் நாளை பள்ளிக்கு வந்து என்ன என்று விசாரிக்கிறோம் என்று கூறினார்களாம் . இதனால் மனம் உடைந்த மாணவன் என் சாவுக்கு ஆசிரியர்கள் பியூலா , மேரி , வளர்மதி மற்றும் தலைமை ஆசிரியர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று இரவு 8 எட்டு மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மாணவன் விபரீத முடிவெடுத்த சம்பவத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை தன்னுடைய முடிவுக்கு தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்களே காரணமென மாணவர் எழுதிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது



6 comments:

  1. அரசு,அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்களை கொன்று விடுங்கள், மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்,அரசுக்கு நிறைய பணமும் மிச்சம்,நாடும் சீரும் சிறப்புமாக நலமுடன் இருக்கும்

    ReplyDelete
  2. பொதுமக்களும் மகிழ்வோடு வாழ்வாங்கு வாழ்வார்கள்,கல்விக்கூடம் இல்லா சிறந்த அறிவாளிகள் நிறைந்த நாடாக நம்நாடு மாற்றம் பெற்று செழுமை மிகு அமெரிக்காவிற்கு இணையான வல்லரசு நாடாக மாறும்

    ReplyDelete
  3. கல்வி கற்று தந்த ஆசிரியர்களுக்கு இறந்த பின்பும் அந்த மாணவன் மிகச்சிறந்த உயர்ந்த பரிசை வாரி வழங்கிய நல்ல மாணவன் இது போன்ற நல்ல மாணவர்கள் இந்த நாட்டிற்கு நிறைய தேவை வாழ்க நம் தாய்திருநாடு

    ReplyDelete
  4. இனிமேல் எந்த ஆசிரியர்களும் நல்ல அருமையான பரமக்குறிச்சி பள்ளி மாணவன் போன்ற அறிவில் சிறந்த மாணவர்களையும் மற்ற மாணவர்களையும் கண்டிக்க மாட்டார்கள் ,தன் பிள்ளை போன்று நினைத்து அடிக்கவும் மாட்டார்கள் ,மாணவர்களும் நன்கு படித்து உலகச் சிறந்த மைதர்களாக இந்திய நாட்டில் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது மட்டும் உண்மை

    ReplyDelete
  5. ஆசிரியர்கள் நால்வருக்கும் வழங்கப்பட்ட தண்டனை சரியா தவறா என்று இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவன் அன்றி வேறு யாரும் அறிய மாட்டார்கள்

    ReplyDelete
  6. மாணவனின் விபரீத முடிவு அல்ல... திமிரான முட்டாள் தனமானமுடிவு...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி