அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கானகடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) பிஎட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல்,வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
18-ம் தேதி தரவரிசை பட்டியல்: கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, பிஎட் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று (9-ம் தேதி) ஆகும். இதைத் தொடர்ந்து, மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும்.
அதன் பிறகு, பிடித்தமான கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வரும் 21 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும். கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வரும் 28-ம் தேதி வழங்கப்படும். ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வியியல் கல்லூரியில் ஜூலை 31 முதல் ஆக. 4-ம் தேதிக்குள் சேர வேண்டும். முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆக. 6-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி