நீதிமன்ற உத்தரவு காரணமாக மாற்றி அமைக்கப்பட்ட DEO தேர்வு பட்டியல்:
* 2021 ஆம் ஆண்டு நேரடி போட்டித் தேர்வு மூலம் 20 பேர் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
* இதில் இனச் சுழற்சியில் தவறு நடந்ததாக கூறி நிர்மல் குமார் என்பவர் வழக்கு தொடுத்தார்.
* மேற்கண்ட வழக்கை விசாரித்த *சென்னை உயர் நீதிமன்றம் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து புதிய திருத்திய தேர்வுப் பட்டியலை வெளியிட ஆணையிட்டது.
* இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது....
* மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவின் படி திருத்திய தேர்வுப்பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் , அந்த பட்டியல் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் இடைக்கால ஆணை வழங்கப்பட்டது.
* இந்நிலையில் *தற்போது திருத்திய முன்னுரிமைப் பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. இதில் நான்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் பதவியை இழக்கின்றனர். புதிதாக மூன்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
* TNPSC இன் தவறான இனச்சுழற்சி கடைபிடிப்பு காரணமாக பணிவாய்ப்பு இழந்த பணி நாடுநர்கள் தற்பொழுது மாவட்ட மாவட்ட கல்வி அலுவலராக நீதிமன்ற உத்தரவின் காரணமாக பணி நியமனம் பெற உள்ளார்கள்...
* அதிகாரம் மறுக்கின்ற நீதியை பல சமயங்களில் நீதிமன்றமே உறுதி செய்கிறது* என்பதனை மேற்கொண்ட பட்டியல் வாயிலாக அறிந்து கொள்ளலாம்....
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி