அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ தேர்வுக்காக 236 பயிற்சி மையங்கள்: பள்ளிக் கல்வித் துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2025

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ தேர்வுக்காக 236 பயிற்சி மையங்கள்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

 

அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ஜேஇஇ, நீட் உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளிப்​ப​தற்​காக 236 வட்​டார உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.


இதுகுறித்​து, அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக் கல்வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: உயர்​ கல்விக்​கான நீட், ஜேஇஇ உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​கள் எழுத விருப்​ப​முள்ள மாணவர்​களுக்​காக வட்​டார அளவி​லான உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.


இதுத​விர, போட்​டித் தேர்​வு​களுக்கு தயார்​படுத்​து​வதற்​காக இந்த ஆண்டு 38 மாவட்​டங்​களில் இருந்து உயர் தொழில்​நுட்ப ஆய்வக வசதி​யுள்ள 236 வட்​டாரங்​களில் உயர்​கல்வி வழி​காட்டி மையங்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு மாணவர்​களின் உயர்​கல்வி விருப்​பத்​துக்கு ஏற்ப சனிக்​கிழமை​களில் உரிய பயிற்​சிகள் வழங்​கப்​படும். அதில் உயர்​கல்வி சேர்க்​கைக்​கான ஆலோ​சனை​கள், வழி​காட்​டு​தல்​களைப் பெறலாம். இந்த மையங்​களில் பயிற்சி தர முது​நிலைப் பாட ஆசிரியர்​கள் சுழற்சி முறை​யில் நியமிக்​கப்​பட்​டுள்​ளதை உறு​தி​செய்ய வேண்​டும்.


அதே​போல், பயிற்​சிகள் தடை​யின்றி நடை​பெறும் வகை​யில், சார்ந்த வட்​டாரத்​தின் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஒவ்​வொரு வார​மும் பணி புரிவதை உறுதி செய்ய வேண்​டும். பயிற்சி அளிக்​கும் ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​களுக்கு மதிப்​பூ​தி​யம் ரூ.1,000 வழங்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி