சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு சாரணர் இயக்கத்துக்கு புதிய தலைமை அலுவலகம் நவீன வசதிகளோடு ரூ.8.94 கோடியில் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: பள்ளி மாணவர்களை அதிக அளவில் சாரணர் இயக்கத்தில் சேர்க்கும் வகையில் மேலும் பல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக, தமிழ்நாடு சாரணர் இயக்கத்துக்கு புதிய தலைமை அலுவலகம் நவீன வசதிகளுடன் ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப். 2-ம் தேதி அறிவித்தார்.
அதன்படி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரத சாரணர் இயக்க தலைமை வளாகத்தில் நவீன பயிற்சி வசதிகளோடு, புதிய தலைமை அலுவலக கட்டிடம் கட்ட நிர்வாக அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தரை மற்றும் 3 தளங்களுடன் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. தரைத் தளத்தில் வாகன நிறுத்துமிடம், உபகரணங்கள் வைக்கும் அறை, பாதுகாவலர் அறை, பொது கழிப்பறையும், முதல் தளத்தில் 7 விருந்தினர்கள் அறை, 2 முக்கிய விருந்தினர்கள் அறை, 2 சிறப்பு அறைகள், சேமிப்பு அறையும் அமைக்கப்படும்.
2-வது தளத்தில் நிர்வாக அலுவலகம், பதிவேடு அறை, மாநில செயலாளர் அறை, ஓய்வறை, கழிப்பறையும், 3-வது தளத்தில் மாநாட்டுக் கூடம், முக்கிய நபர்களுக்கான ஓய்வறை, மாநில தலைமை ஆணையர் அறை, சாரணர்களை வழிப்படுத்தும் அறையும் அமைக்கப்படும். இதற்காக ரூ.8 கோடியே 93 லட்சத்து 81,199 செலவிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி