சென்னை திருவல்லிக்கேணியில் சாரணர் இயக்கத்துக்கு நவீன வசதியுடன் தலைமை அலுவலகம்: பள்ளிக்கல்வித் துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2025

சென்னை திருவல்லிக்கேணியில் சாரணர் இயக்கத்துக்கு நவீன வசதியுடன் தலைமை அலுவலகம்: பள்ளிக்கல்வித் துறை

 

சென்னை திரு​வல்​லிக்​கேணி​யில் தமிழ்​நாடு சாரணர் இயக்​கத்​துக்கு புதிய தலைமை அலு​வல​கம் நவீன வசதி​களோடு ரூ.8.94 கோடி​யில் அமைக்​கப்​படு​கிறது.


இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் வெளி​யிட்ட அரசாணை விவரம்: பள்ளி மாணவர்​களை அதிக அளவில் சாரணர் இயக்​கத்​தில் சேர்க்​கும் வகை​யில் மேலும் பல ஆசிரியர்​களுக்கு பயிற்சி அளிக்க ஏது​வாக, தமிழ்​நாடு சாரணர் இயக்கத்துக்கு புதிய தலைமை அலு​வல​கம் நவீன வசதி​களு​டன் ரூ.10 கோடி​யில் அமைக்​கப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் கடந்த பிப். 2-ம் தேதி அறி​வித்​தார்.


அதன்​படி, சென்னை திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள பாரத சாரணர் இயக்க தலைமை வளாகத்​தில் நவீன பயிற்சி வசதி​களோடு, புதிய தலைமை அலு​வலக கட்​டிடம் கட்ட நிர்​வாக அனு​மதி அளித்து அரசு ஆணை​யிட்​டுள்​ளது. இதற்​கான அரசாணை​யும் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.


தரை மற்​றும் 3 தளங்​களு​டன் இந்த கட்​டிடம் கட்​டப்பட உள்​ளது. தரைத் தளத்​தில் வாகன நிறுத்​து​மிடம், உபகரணங்​கள் வைக்​கும் அறை, பாது​காவலர் அறை, பொது கழிப்பறை​யும், முதல் தளத்​தில் 7 விருந்​தினர்​கள் அறை, 2 முக்​கிய விருந்​தினர்​கள் அறை, 2 சிறப்பு அறை​கள், சேமிப்பு அறை​யும் அமைக்​கப்​படும்.


2-வது தளத்​தில் நிர்​வாக அலு​வல​கம், பதிவேடு அறை, மாநில செய​லா​ளர் அறை, ஓய்​வறை, கழி​ப்பறை​யும், 3-வது தளத்​தில் மாநாட்டுக் கூடம், முக்​கிய நபர்​களுக்​கான ஓய்​வறை, மாநில தலைமை ஆணை​யர் அறை, சாரணர்​களை வழிப்​படுத்​தும் அறையும் அமைக்​கப்​படும். இதற்​காக ரூ.8 கோடியே 93 லட்​சத்து 81,199 செல​விடப்பட உள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி