கல்வி நிதியை விடுவிக்க கோரிய வழக்கு மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2025

கல்வி நிதியை விடுவிக்க கோரிய வழக்கு மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு

 

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க உத்தரவிட கோரிய தமிழக அரசின் மனு மீது மத்திய பள்ளி கல்வித்துறை அமைச்சகத்தின் செயலர் சார்பில், வழக்கறிஞர் அடுத்த விசாரணையின் போது ஆஜராக வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தேசிய கல்விக் கொள்கை மற்றும் 'பி.எம்.,ஸ்ரீ' திட்டத்தினை தமிழக அரசு ஏற்காமல் இருப்பதால், 'சமக்ரா சிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 2,291 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பதாகவும், இந்த தொகையை உடனடியாக, 6 சதவீத வட்டியுடன் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தர விட கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி