பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.யின், 592வது கூட்டம், கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது.
இந்த கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறையின் பாடத்திட்டங்களை, திறந்தநிலை, தொலை துாரம் மற்றும் ஆன்லைன் கல்வி முறையில் கற்றுக் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படி, உளவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல், உயிரி தொழில்நுட்பம், மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை ஆகிய, ஹெல்த் கேர் படிப்புகளை, திறந்தநிலை, தொலைதுாரம் மற்றும் ஆன்லைன் முறையில் கற்பிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, தேசிய கூட்டு மற்றும் சுகாதார சேவை சட்டத்தின்படி, வரும் 2025 - 26ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக, யு.ஜி.சி. அறிவித்து உள்ளது.
நாட்டில் உள்ள எந்த ஒரு உயர் கல்வி நிறுவனமும், உளவியல் உட்பட, ஹெல்த் கேர் தொடர்பான படிப்புகளை, திறந்த நிலை, தொலைதுாரம் மற்றும் ஆன்லைனில் கற்பிக்க கூடாது என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி