School Morning Prayer Activities - 22.08.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2025

School Morning Prayer Activities - 22.08.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.08.2025

திருக்குறள் 

குறள் 324: 


நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் 

கொல்லாமை சூழும் நெறி. 


விளக்க உரை: 


நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.


பழமொழி :

Learn today, lead tomorrow. 


இன்று கற்றுக்கொள், நாளை தலைமை தாங்கு.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.


2. எனவே நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பேன்.


பொன்மொழி :


கடுமையான கஞ்சத்தனம் ,தகுதியற்ற தற்பெருமை , எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் ஒரு மனிதனை வீணாக்கி விடும் - முகம்மது நபி


பொது அறிவு : 


01.தமிழ்நாட்டின் சிமெண்ட் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?



அரியலூர்(Ariyalur )


02. பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் பெயர் என்ன?


பாரத இம்பீரியல் வங்கி

Imperial Bank of India.


English words :


artisan - a person who makes things skilfully, especially with their hands;கைவினை கலைஞர்


Grammar Tips: 


 Two Conjunctions should not be used in the same sentence.


 Incorrect sentence - Although she was tired, but she still went on working. 


Correct sentence- Although she was tired, she still went on working


அறிவியல் களஞ்சியம் :


 குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.


ஆகஸ்ட் 22


சென்னை தினம்


 சென்னைதினம்  என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.


கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். 


வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.


நீதிக்கதை


 முரட்டு ஆடு


ஒரு மலையடிவாரம் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதனால், அங்கே மலையடிவாரத்தில் பச்சைப்பசேல் என்று புல் வளர்ந்திருந்தது. 


அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை. அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும். 


ஒரு நாள் ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து பயந்து தப்பி ஓடி முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது. முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம் என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன் என்று அமைதியாக சொன்னது. 


முரட்டு ஆடோ, அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டைப்போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சமாதானமாகவே பேசியும், முரட்டு ஆடு கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று சண்டையிட்டது. 


மலைச்சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக்கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டது. 


நீதி :

தான்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம், திமிரு இருந்தால் நஷ்டம் நமக்கே.


இன்றைய செய்திகள் - 22.08.2025


⭐12 மற்றும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி

வரி நீக்கம்: மந்திரிகள் பொதுக்கூட்டத்தில் ஒப்புதல்.


⭐ஆன்லைன் கேமிங் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்.


⭐காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26-ந்தேதி தொடங்கி வைக்கிறார்


⭐ஐதராபாத்-சென்னை புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு


🏀  விளையாட்டு செய்திகள்


🏀மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரகானே விலகல்


🏀இரண்டே போட்டியில் சர்ச்சையில் சிக்கினார் தென்ஆப்பிரிக்க பவுலர் சுப்ராயன்.


Today's Headlines


⭐ Central Minister's  general meeting approved the 12 percent and 28 percent of GST tax 


⭐Purpose of the Online Gaming Ban Bill passed in the Rajya Sabha. 


⭐Chief Minister M.K. Stalin to launch breakfast meal scheme expansion from August 26th.


⭐Plan proceeds to set up the Hyderabad-Chennai bullet train line.


 SPORTS NEWS 


🏀Rahane steps down as Mumbai captain 


🏀South African bowler Subramanyam was embroiled in controversy in both matches.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி