டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ நாளை முதல்நிலை தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ நாளை முதல்நிலை தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்

டிஎன்​பிஎஸ்சி ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2 ஏ முதல்​நிலைத் தேர்வு நாளை (ஞா​யிற்​றுக்​கிழமை) நடை​பெறுகிறது. மொத்​தம் 645 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​காக நடத்​தப்​படும் இத்​தேர்வை 5 லட்​சத்து 53,635 பேர் எழுத உள்​ளனர்.


இத்​தேர்​வுக்கு 5 லட்​சத்து 53,635 பேர் விண்​ணப்​பித்​ததனர். அதில் ஒரேயொரு விண்​ணப்​ப​தா​ரரின் விண்​ணப்​பம் மட்​டும் நிராகரிக்​கப்​பட்டு மற்ற அனை​வரின் விண்​ணப்​பங்​களும் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டன.


இந்த நிலை​யில், ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​ட​வாறு குரூப் 2 மற்​றும் குரூப் 2 ஏ முதல்​நிலைத்​தேர்வு நாளை (ஞா​யிற்​றுக்​கிழமை) நடை​பெறுகிறது. இதற்​காக சென்னை உள்பட அனைத்து மாவட்​டங்​களி​லும் தேர்வு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.


சென்​னை​யில் 188 தேர்​வுக் கூடங்​களில் 53,606 பேர் எழுதுகின்​றனர். முதல்​நிலைத் தேர்​வில் பெறும் மதிப்​பெண் அடிப்​படை​யில் விண்​ணப்​ப​தா​ரர்​கள் அடுத்​தகட்ட தேர்​வான மெயின் தேர்​வுக்கு அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். ‘ஒரு காலி​யிடத்​துக்கு 10 பேர்’ என்ற விகி​தாச்​சார அடிப்​படை​யில் மெயின் தேர்​வுக்கு விண்​ணப்​ப​தா​ரர்​கள் தேர்​வுசெய்​யப்​படு​வர். அந்த வகை​யில் தற்​போது காலி​யிடங்​களின் எண்​ணிக்கை 645 ஆக இருப்​ப​தால் ஏறத்​தாழ 6,500 பேர் மெயின் தேர்​வுக்கு செல்​வார்​கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி