டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று(செப். 28) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ்வுக்கான பதவிகள்) மற்றும் 2 ஏ நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கான தோ்வு நடைபெற்றது.
எழுத்துத் தேர்வை 4,18,791 பேர் எழுதியதாகவும், 1.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்றும்,முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
மேலும், “குரூப் 4 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும். 2026-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி-யின் காலஅட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுவும் டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும்" என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி