பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்திட வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நவம்பர் முழுவதும் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது. இதில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள், அரசு நிலைப்பாடு குறித்து விவாதித்தனர்.
பத்து அம்ச கோரிக்கைகளாக 1.4.2003 க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 23.8.2010க்கு முன்பு பணியேற்ற ஆசிரியர்களை 'டெட்' அச்சுறுத்தலில் இருந்து காக்க சீராய்வு மனு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு இணையான சம்பளத்தை மாநில அரசும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும். கருணைப் பணிநியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை குறித்து ஆலோசனை நடந்தது.
அமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டத்தை நவ., 1 ல் திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளனர். நவ.,10 முதல் 14 வரை பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசின் தாமதம், அதற்காக போராட்டம் நடத்துவது, அதில் பங்கேற்பது குறித்து வாகன பிரசார இயக்கம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.
நவ.,18 ல் அடையாள வேலை நிறுத்தம் செய்வது, இதில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பங்கெடுக்கச் செய்வது என்றும், அதன்பின்னும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு செல்வது என்றும் தெரிவித்துள்ளனர்.

சாகபோகையில் சங்கரா என்று சொல்வது போல் இந்த சங்க செயல்பாடு
ReplyDeleteஇந்திய திருநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் படிச்சிட்டு வேலையில்லா இருக்கிற இந்த சூழ்நிலையில ஆசிரியர் வேலையில இருக்கிற ரெகுலரா ஆசிரியர் வேலையில இருக்கிற பல்லாயிரம் அரசு ஆசிரியர்கள் இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கேட்பது அவர்களுடைய உரிமையா இருந்தாலும் அவர்கள் வாங்குகின்ற ஊதியம் அதிகமே ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட 40,000 50,000 அப்படின்ற மேனிக்கு சம்பளம் வாங்குறாங்க இதை வச்சுக்கிட்டு அவங்கள வாழ்க்கை நடத்த முடியாதா என்ன ஆசிரியர் பணியில் என்னத்த இவங்க வெட்டி மறைக்கிறாங்க இவங்க அரசு அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு எல்லா சலுகைகளும் அரசாங்கம் கொடுக்குது இந்த லட்சணத்துல ஊதியம் வேற ஊதிய உயர்வு வேற ஏத்தி கேட்கிறது பென்ஷன் வேற பென்ஷன் வேற கேட்கிறது கொடுக்கிற சம்பளமே அதிகமான சம்பளம்
ReplyDeleteதாராளமாக நீங்களும் படித்து பட்டம் பெற்று போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று அரசு பணி பெற வாழ்த்துக்கள்👍...
ReplyDelete