கர்நாடகாவில் மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2025

கர்நாடகாவில் மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசு முடிவு

கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மாத​வி​டாய் விடு​முறைக்கு எதி​ராக வழக்கு நடை​பெற்று வரும் நிலை​யில், அம்​மாநில அரசு பள்​ளி, கல்​லூரி மாணவி​களுக்​கும் மாத​வி​டாய் விடுப்பு வழங்க அரசு முடி​வெடுத்​துள்​ளது.


கர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் 18 முதல் 52 வயது வரையி​லான பெண் பணி​யாளர்​களுக்கு மாத​வி​டாய் காலத்​தில் மாதம் ஒரு​நாள் ஊதி​யத்​துடன் கூடிய விடு​முறை அளிக்க மாநில‌ அரசு கடந்த நவம்​பர் 20-ம் தேதி உத்​தர​விட்​டது. இதற்கு எதி​ராக கர்​நாடக ஓட்​டல் உரிமை​யாளர்​கள் சங்​கம் தொடர்ந்த வழக்​கில், அம்​மாநில உயர்​நீ​தி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​தது.


இந்​நிலை​யில் கர்​நாடக அரசின் தலைமை வழக்​கறிஞர் சசிகிரண் ஷெட்டி நேற்று நீதிபதி எம்​.ஜோதி முன்​னிலை​யில் ஆஜராகி எழுத்​துப்​பூர்​வ​மான வாதத்தை தாக்​கல் செய்​தார். அப்​போது அவர், ‘‘ஜப்​பானில் 1947-ம் ஆண்டே மாத​வி​டாய் காலத்​தில் பெண்​களுக்கு விடு​முறை அளிக்​கும் முறை அமலுக்கு வந்​துள்​ளது. கர்​நாட​கா​வில் இந்த திட்​டம் தற்​போது​தான் அமல்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.


மகளிரின் நலனை கருத்​தில் கொண்டு அரசு மேற்​கொண்​டுள்ள இந்த கொள்கை முடி​வில் தனி​யார் நிறு​வனங்​களிடம் அனு​மதி கேட்க வேண்​டிய​தில்​லை” என்​றார்.


இதனை ஏற்ற நீதிப​தி, இவ்​வழக்​கின் ஆட்​சேப மனுக்​கள் மீது விரி​வான விசா​ரணை நடத்த வேண்​டி​யுள்​ளது. எனவே வழக்​கின் அடுத்​தகட்ட விசா​ரணை வரும் ஜனவரி 20-ம் தேதி நடத்​தப்​படும்​'' எனக்​கூறி வழக்கை ஒத்​தி​வைத்​தார்.


இந்​நிலை​யில் கர்​நாடக அரசு மாத​வி​டாய் விடு​முறை திட்​டத்தை அம்​மாநிலத்​தில் பள்​ளி, கல்​லூரி​களில் பயிலும் மாணவி​களுக்​கும் நீட்​டிக்க திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​காக மாத​வி​டாய் விடுப்பு கொள்கை சட்​டத்​தில் திருத்​தத்தை மேற்​கொள்ள அரசு முடி​வெடுத்​துள்​ளது. அதன்​படி மாதத்​துக்கு ஒரு நாள் வீதம் ஆண்​டுக்கு 12 நாட்​கள் மாணவி​கள் மாத​வி​டாய் விடு​முறை எடுத்​துக்​கொள்ள அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்​ என தகவல்​ வெளி​யாகியுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி