கேரள பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் - மசோதாவுக்கு கர்நாடக மாநிலம் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2026

கேரள பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் - மசோதாவுக்கு கர்நாடக மாநிலம் எதிர்ப்பு

 

கேரள பள்​ளி​களில் 10-ம் வகுப்பு வரை மாணவர்​கள் கட்​டாய​மாக மலை​யாளம் கற்க ​வகை செய்​யும் சட்ட மசோதா கடந்த ஆண்டு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோ​தாவை விரைவில் சட்​ட​மாக்க மாநில அரசு தீவிர முயற்​சிகளை மேற்கொண்டு வரு​கிறது.

இதற்கு கர்​நாடக அரசு கடும் ஆட்​சேபம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக கர்​நாடக எல்​லை​யோர மக்​கள் வளர்ச்சி வாரியத்தின் சார்​பில் அதன் செய​லா​ளர் பிர​காஷ் மத்​திஹள்ளி உள்​ளிட்ட நிர்​வாகி​கள் கேரள மாநில ஆளுநர் ராஜேந்​திர அர்லேகரிடம் மனு அளித்​தனர்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: கேரளா​வின் வயநாடு, காசர்​கோடு ஆகிய எல்​லை​யோர மாவட்​டங்​களில் கன்​னடர்​கள் பரவலாக வாழ்​கின்​றனர். குறிப்​பாக காசர்​கோடு மாவட்​டத்​தில் 70 சதவீதத்​துக்​கும் அதி​க​மான எண்​ணிக்​கை​யில் கன்​னடர்​கள் இருக்​கின்​றனர். இவர்​கள் தங்​களின் தாய்​மொழி​யான கன்​னடத்தை கற்று வரு​கின்​றனர்.

கேரள அரசின் மலை​யாள கட்​டாய மசோதா அமல்​படுத்​தப்​பட்​டால், கன்​னடர்​கள் கன்​னடம் கற்க முடி​யாத நிலை ஏற்​படும். அரசி​யலமைப்​பின் 350-வது பிரிவு மொழி சிறு​பான்​மை​யினரின் உரிமை​களை பாது​காப்​பது மாநிலத்​தின் கடமை என்று குறிப்பிடுகிறது.

கேரள அரசு மலை​யாளத்தை கட்​டாய​மாக்​கு​வது மொழி சிறு​பான்​மை​யினரின் உரிமை​களுக்கு எதி​ரானது. இந்​திய அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு எதி​ரான அந்த மசோ​தாவை நிராகரிக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் குறிப்​பிடப்​பட்டு உள்​ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரள அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி