அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,021 முதுநிலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் கடந்த 13-ம் தேதி வழங்கினார். புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து முதுநிலை ஆசிரியர்களும் மருத்துவச் சான்றுடன் இன்று (பிப்.16) தங்களுக்கான பள்ளிகளுக்குச் சென்று பணியில் சேர உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இவர்களுக்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் வரும் 18-ம் தேதிநடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
‘புதிதாக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 26 மாவட்டங்களைச் சேர்ந்த 1,021 ஆசிரியர்களுக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிப்.18-ம் தேதி புதுமுகப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விவரத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி