2% அகவிலைப்படி உயர்கிறது!
01.01.2026 முதல் அகவிலைப்படி 58% லிருந்து 60% ஆக அதிகரிக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வின் அடிப்படையில், ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.
கடந்த ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்தில், விலைவாசி உயர்வு குறியீட்டு எண் இன்று வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் 01.01.2026 முதல், அகவிலைப்படி 2% உயர்ந்து, 58% லிருந்து 60% ஆக அதிகரிக்கிறது.
இதற்கான முறையான அறிவிப்பு, மார்ச் மாதம் இறுதியில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும்.
ஒன்றிய அரசு அறிவித்தவுடன், தமிழ்நாடு அரசும், தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கும்.
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி