தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்.1 முதல் 16-ம் தேதிவரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதிநடைபெறவுள்ளது. இதையடுத்து 1 முதல் 9-ம் வகுப்புவரைமுழுஆண்டு தேர்வு முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்றுபள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுக்கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.1 முதல் 16-ம் தேதிவரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4, 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.6-ல் தொடங்கி 16-ம் தேதி வரையும், 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வுகள் ஏப்.8 முதல் 16-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.
இந்த கால அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களோடு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்துவித பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். எனினும், பள்ளி இறுதி வேலை நாள் வரை ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி