திருக்குறள்
work is worship.
செய்யும் தொழிலே தெய்வம்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.
2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்
பொன்மொழி :
படைப்பாற்றலின் கதவை திறக்கக் கூடிய சாவி கல்வி -அகதா கிறிஸ்டி
பொது அறிவு :
01.மிகக் குறைந்த வயது அமெரிக்க அதிபர் யார்?
02. ஒலிம்பிக் கொடியை உருவாக்கியவர் யார்?
English words :
meticulous -
giving or showing great attention to details
நுணுக்க விவரங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிற.
jostle -
to push hard against somebody in a crowd.
கூட்டத்தில் ஒருவர் மீது வலுவுடன் இடித்தல்
தமிழ் இலக்கணம்:
இன்று நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அந்நிய மொழி அவற்றின் மொழி ஆதாரங்கள் குறித்து பார்ப்போம்
1. குல்லா - பார்சி
2. ரிக்க்ஷா - ஜப்பானிய
3. பஜார் - பார்சி
4. அலமாரி - போர்ச்சுகீசியம்
5. இனாம் - உருது
அறிவியல் களஞ்சியம் :
ஒளியின் வேகம் பொதுவாக வினாடிக்கு 186,000 மைல்கள் எனக் குறைத்துக் கூறப்படுகிறது. துல்லியமாகச் சொன்னால், அது 299,792,458 மீ/வி (மீட்டர்/விநாடி – அதாவது வினாடிக்கு 186,287.49 மைல்களுக்குச் சமம்).
ஏப்ரல் 10
நீதிக்கதை
கெட்டிக்கார சேவல்
ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.
இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,
" சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்" என்றது.
நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.
இதைக் கண்ட நரி, "என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது?" என்று கேட்டது.
அதற்கு சேவல்,
" அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா? என்பதைக் கவனிக்கிறேன்" என்றது.
அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக "சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்" என்று கூறி கிளம்பியது.
சேவல், "அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது"
நரி "அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்" என்றது
இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.
சேவல் 'யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது" என்று கூறி சிரித்தது.
கெட்டிக்காரன் பொய் சொன்னாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி