2025-2026ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை மாற்றியமைக்குமாறு இந்நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பார்வை 2இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் 2026-2027ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 வகுப்புகளுக்கான கலைத்திட்டம். பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை மாற்றியமைக்குமாறு இந்நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை (State Board) பல்வேறு நாடுகள். மாநிலங்கள் மற்றும் பிற வாரியங்களின் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்துடன் ஒப்பபீடு செய்யும் பணி இந்நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்தொடர்ச்சியாக 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை மீளாய்வு செய்து இறுதி செய்யும் பணிமனை சென்னை-06. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 11.05.2026 முதல் 15.05.2026 வரை நடைபெற உள்ளது.
எனவே இப்பணிமனையில் கலந்துகொள்ள எதுவாக இணைப்பிலுள்ள மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கான பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களைப் பணிவிடுவிப்பு செய்யுமாறு சார்ந்த அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
TNCF-2025 HSS-Curriculum and Syllabus Workshop.pdf

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி