நீட் தேர்வு முடிவு வெளியான பின் கால்நடை படிப்புக்கு கவுன்சலிங்: பல்கலை, துணைவேந்தர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2026

நீட் தேர்வு முடிவு வெளியான பின் கால்நடை படிப்புக்கு கவுன்சலிங்: பல்கலை, துணைவேந்தர் தகவல்

 

நீட் தேர்வு முடிவு வெளி​யானதும் தமிழகத்​தில் கால்​நடை மருத்​து​வப் படிப்​புக்​கான கவுன்​சலிங் தொடங்​கும் என பல்​கலைக்​கழக துணை வேந்​தர் (பொ) நரேந்​திர​பாபு தெரி​வித்​தார்.

நாமக்​கல் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி மற்​றும்​ஆ​ராய்ச்சி நிலை​யத்​தில் அவர் மேலும் பேசி​ய​தாவது: கால்​நடை மருத்​துவ மாணவர்​கள் புதிய கண்​டு​பிடிப்​புகள் மற்​றும் ஆராய்ச்​சிகளில் அதிக ஈடு​பாடு கொண்​டு, கால்​நடைத் துறை​யின் வளர்ச்​சிக்கு பங்​களிக்க வேண்​டும். புதிய கண்​டு​பிடிப்​பு​களுக்​காக 16 திட்​டங்​கள் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்ளன. அதற்​கான நிதி உதவி​களை மாணவர்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.

பல்​கலைகழகத்​தின்கீழ் செயல்​படும் கல்​லூரி​களில் பிவிஎஸ்சி கால்​நடை மருத்​து​வம் மற்​றும் மீன்​வளப் படிப்​பு​களுக்​காக 20 ஆயிரத்து 100 பேர் ஆன்​லைனில் விண்​ணப்​பித்​துள்​ளனர். நீட் தேர்வு முடிவு வெளி​யான பிறகு 660 கால்​நடை மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​கள் மற்​றும் 100 பி.டெக். இடங்​களுக்​கான கலந்​தாய்வு தொடங்​கப்​படும்.

வெட்​னரி கவுன்​சிலின் அனு​மதி கிடைத்​தால் கூடு​தலாக 100 இடங்​கள் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது. தனி​யார் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​கள் தொடங்க இது​வரை யாரும் விண்​ணப்​பிக்​க​வில்​லை. நாமக்​கல் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​யில் தோல் தொழிற்​சாலை அமைப்​ப​தற்​கான எந்த நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ளப்​பட​வில்​லை. இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி