எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2026

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. நீட் மறுதேர்வால் தாமதம் ஆகியுள்ள மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் இத்தேர்வை நடத்துகிறது.

நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரண மானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், நீட் மறுதேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகளை ஓரிரு வாரங்களில் வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.

மாணவர்கள் ஆர்வம் இதன் காரணமாக, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது சுகாதாரத் துறை இணையதளத்தில் (www.tnmedicalselection.org) நேற்று தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆன்லைனில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசுக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள், அதுதொடர்பான விவரங்கள் இணையதளத்தில் உள்ளன.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் வரை விண்ணப்பிக்கலாம். அதனால், கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுபோலவே, நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, என்டிஏவிடம் இருந்து நீட் மதிப்பெண்கள் பெற்றுக் கொள்ளப்படும்” என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி