திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:44 குற்றங்கூறாமை
குறள் எண்:437
குறள்:
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
பொருள்:
செல்வம் பெற்ற போது அதனாலே செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும் .
A guilty conscience needs no Accuser
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .
2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.
பொன்மொழி :
எழுந்திருங்கள், விழித்திருங்கள், இலக்கை அடையும் வரை நிறுத்தாதீர்கள்." - சுவாமி விவேகானந்தர்
Thought for the Day :
Arise, awake, and stop not till the goal is reached."
பொது அறிவு :
1. இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த அலங்கார ஊர்திக்கான முதல் பரிசு பெற்ற மாநிலம் எது?
மகாராஷ்டிரம்.
2. குதிக்க முடியாத விலங்கு எது?
யானை.
English words :
Accelerate – Speed up, வேகப்படுத்து.
Allocate – Assign, ஒதுக்கு.
புவியியலும் சுற்றுசூழலும் :
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்தியாவில் மூன்று வகை ஆட்சித் துறைகள் உள்ளன:
சட்டமன்றம் (Legislature)
நிர்வாகம் (Executive)
நீதித்துறை (Judiciary)
NMMS :
எஎரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் அளவு தோராயமாக _______________ க்குச் சமமாகும்.
(1) ஒரு ரேடியன்
(2) ஒரு லுமென்
(3) ஒரு கேண்டிலா
(4) ஒரு ஸ்ட்ரேடியன்
விடை: (3) ஒரு கேண்டிலா
ஜூன் 25
நீதிக்கதை
🌿 மன்னிக்கும் மனம்
ஒரு கிராமத்தில் அருண் மற்றும் வருண் என்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர்.
ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் கொடுத்த அழகான ஓவியத்தை அருண் மிகவும் கவனமாக வரைந்து கொண்டிருந்தான். அப்போது விளையாட்டாக ஓடிவந்த வருண் தவறுதலாக அருணின் ஓவியத்தின் மேல் தண்ணீரைக் கொட்டிவிட்டான்.
அருணின் ஓவியம் முழுவதும் கெட்டுப்போயிற்று.
வருண் மிகவும் வருந்தினான்.
"அருண், என்னை மன்னித்துவிடு. நான் வேண்டுமென்று செய்யவில்லை," என்று கண்ணீர் மல்கக் கூறினான்.
அருணுக்கு முதலில் கோபம் வந்தது. ஆனால் சிறிது நேரம் யோசித்தான்.
"தவறு எல்லோரிடமும் நடக்கலாம். நீ உண்மையாக வருந்துகிறாய். நான் உன்னை மன்னிக்கிறேன்," என்றான்.
அந்த வார்த்தையைக் கேட்ட வருண் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இருவரும் மீண்டும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.
அடுத்த நாள் ஆசிரியர் இந்த நிகழ்வைப் பற்றி அறிந்து கொண்டு கூறினார்:
"கோபத்தை வைத்துக்கொள்வதை விட மன்னிப்பது பெரிய குணம். மன்னிக்கும் இதயம் உள்ளவர்களே உண்மையான வெற்றியாளர்கள்."
நீதிக்கருத்து
"மன்னிப்பு பலவீனம் அல்ல; அது பெரிய மனதின் அடையாளம்."
"பிறரின் தவறுகளை மன்னிக்கக் கற்றுக்கொண்டால், நம் நட்பும் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி