பொறியியல் மாணவர் சேர்க்கை: முதல் சுற்று கலந்தாய்வில் 35,214 பேருக்கு தற்காலிக ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2026

பொறியியல் மாணவர் சேர்க்கை: முதல் சுற்று கலந்தாய்வில் 35,214 பேருக்கு தற்காலிக ஆணை

 

பொறியியல் மாணவர் சேர்க்​கை​யில் பொதுப்​பிரி​வினருக்​கான முதல் சுற்று கலந்​தாய்​வில் 35,214 மாணவர்​களுக்கு தற்​காலிக இட ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது. அந்த மாணவர்​கள் தற்​காலிக ஒதுக்​கீட்டை இன்று மாலை 5 மணிக்​குள் உறு​திப்​படுத்த வேண்​டும் என அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

நடப்புக் கல்வி ஆண்டு பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு ஜூலை 13-ம் தேதி​யும், சிறப்பு பிரி​வினருக்​கான கலந்​தாய்வு 15-ம் தேதி​யும் நடை​பெற்​றன.

இந்தக் கலந்​தாய்​வின் மூலம் 950 பேருக்கு இட ஒதுக்​கீட்டு ஆணை​கள் வழங்​கப்​பட்​டன. இதைத்​தொடர்ந்து பொதுப்​பிரி​வினருக்​கான முதல்சுற்று ஆன்​லைன் கலந்​தாய்​வு, கடந்த 20-ம் தேதி தொடங்​கியது.

இதில் 200 முதல் 171 கட் ஆப் மதிப்​பெண் பெற்​றவர்​கள், அரசுப் பள்ளி மாணவர்​கள், பொதுப்​பிரிவு மற்​றும் அரசுப் பள்ளி 7.5 சதவீத ஒதுக்​கீட்​டில் தகு​தி​யுள்ள அனைத்து தொழிற்​கல்வி மாணவர்​களும் கலந்​து​கொண்​டனர்.

நேற்று காலை 10 மணி வரை முதல் சுற்று கலந்​தாய்​வில் 35,214 மாணவர்​களுக்கு தற்​காலிக ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. தற்​காலிக இடஒதுக்​கீடு பெற்ற மாணவர்​கள், இன்று (சனிக்​கிழமை) மாலை 5 மணிக்​குள் தங்​கள் இடங்​களை உறுதி செய்ய வேண்​டும்.

அவ்​வாறு உறு​திப்​படுத்​தும் மாணவர்​களுக்கு நாளை (ஞா​யிறு) காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்​கீட்டு ஆணை ஆன்​லைனில் வழங்​கப்​படும் என தமிழ்​நாடு பொறி​யியல் மாணவர் சேர்க்கை செய​லா​ளர் புருஷோத்​தமன் தெரி​வித்​துள்​ளார்​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி