திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:441
குறள்:
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
பொருள்:
அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்
A thief knows a thief.
பாம்பின் கால் பாம்பறியும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் .
2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் வெற்றியின் இரு சிறகுகள்.
Thought for the Day :
Excellence is a continuous process and not an accident.
பொது அறிவு :
1. உடல் உறுப்பு தானத்தில் முதன்மையான மாநிலம் எது?
தமிழ்நாடு.
2. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) நிறுவப்பட்ட ஆண்டு எது?
1971
English words :
Substantiate – Prove, நிரூபி.
Transform – Change completely, முழுமையாக மாற்று.
புவியியலும் சுற்றுசூழலும் :
"நமது அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)
சமத்துவ உரிமை
சுதந்திர உரிமை
மத சுதந்திரத்திற்கான உரிமை
கலாச்சார மற்றும் கல்வி உரிமை
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை போன்றவை ஆகும்."
NMMS :
SAT - SOCIAL
சரியான இணையைத் தேர்ந்தெடு.
(1) மன்சப்தாரி முறை - அக்பர் (
2) ஜப்தி முறை - ஔரங்கசீப்
(3) துசுக் - இ - பாபரி - கட்டிடக் கலை (
4) இரண்டாம் பானிபட் போர் - 1526.
விடை : (1) மன்சப்தாரி முறை - அக்பர்
ஜூலை 02
நீதிக்கதை
"துளி துளியாக வந்த செல்வம்"
ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு விவசாயிகள் வாழ்ந்தனர். ஒருவரின் பெயர் சபரி, மற்றொருவரின் பெயர் கிரி. சபரி தனது வீட்டின் கூரையிலிருந்து வரும் மழைநீரை ஒரு பெரிய தொட்டியில் சேமித்தார். கிரி, "மழைநீர் எப்போதும் வரும், அதை ஏன் இவ்வளவு செலவு செய்து, தொட்டி கட்டி சேமிக்க வேண்டும் ?" என்று சிரித்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு கடும் வறட்சி ஏற்பட்டது. கிணறுகள் வற்றின. குடிநீருக்குக் கூட மக்கள் சிரமப்பட்டனர்.
அப்போது சபரி சேமித்திருந்த மழைநீரைத் தனது குடும்பத்திற்கும், அண்டை வீட்டாருக்கும், தனது பயிர்களுக்கும் பயன்படுத்தினார். கிரி வயலுக்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடின. அப்போது கிரி தனது தவறை உணர்ந்து, "அடுத்த மழைக்காலம் முதல் நானும் மழைநீரைச் சேமிப்பேன்" என்று உறுதி எடுத்தார்.
நீதி:
"மழைநீரைச் சேமிப்போம்; நாளைய தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்ப்போம்.”
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி