அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இத்தேர்வுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து சென்னையில் ஆகஸ்ட் 22 முதல் இலவச பயிற்சி வகுப்பை நடத்த உள்ளன.
வகுப்புகள் சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெரு கச்சாலீஸ்வரர் ஆலயம் அருகே அக்ரஹாரம் சந்தில் அமைந்துள்ள அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெறும்.
வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறமையான பயிற்சியாளர்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும்.
இப்பயிற்சி வகுப்பில், ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள், மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய வகுப்பினரும் கலந்துகொள்ளலாம்.
இங்கு பயிற்சி பெற்றவர்களில் 1300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் மத்திய-மாநில அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் 95665 23556, 90427 27276, 79045 22336, 94446 41712 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு உடனடியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி