காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் மின்னணு சரிபார்ப்புக்கான அவகாசம் ஆக.31 வரை நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2026

காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் மின்னணு சரிபார்ப்புக்கான அவகாசம் ஆக.31 வரை நீட்டிப்பு

தமிழகம் முழு​வதும் சமையல் எரி​வாயு சிலிண்​டர் வாடிக்​கை​யாளர்​களின் ‘இ-கேஒய்​சி’ மின்​னணு சரி​பார்ப்​புக்​கான அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதை செய்​யா​விட்​டால், மானி​யத் தொகை ரத்து செய்​யப்​படும். புதிய சிலிண்​டர் முன்​பதிவு ஏற்​கப்​ப​டாது என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​தி​யன் ஆயில், பாரத் பெட்​ரோலி​யம், இந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் ஆகிய பொதுத் துறை எண்​ணெய் நிறு​வனங்​கள் வாடிக்​கை​யாளர்​களுக்கு 14.20 கிலோ எடை​யில் சமையல் எரி​வாயு சிலிண்​டர்​களை விநி​யோகம் செய்​கின்றன.

முறை​கே​டான எரி​வாயு இணைப்​பு​களைக் கண்​டறிய​வும், மானி​யம் தவறாகப் பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்​கும் வகை​யிலும் ‘இ-கேஒய்​சி’ (e-KYC) எனும் மின்​னணு சரி​பார்ப்பை மேற்​கொள்ள, வாடிக்​கை​யாளர்​களுக்கு பொதுத் துறை எண்​ணெய் நிறு​வனங்​கள் அறி​வுறுத்தி உள்​ளன.

சிலிண்​டர் இணைப்பு யார் பெயரில் உள்​ளதோ அவர் சம்​பந்​தப்​பட்ட சிலிண்​டர் விநி​யோக ஏஜென்சி அலு​வல​கத்​துக்கு நேரில் சென்​று, எண்​ணெய் நிறு​வனங்​களின் மொபைல் செயலி​யில், விவரங்​களை பதிவு செய்ய வேண்​டும். இதன்​மூலம் வாடிக்​கை​யாளரின் உண்​மைத் தன்மை சரி​பார்க்​கப்​பட்​டு, உறுதி செய்​யப்​படும். ஏற்​கெனவே, மின்​னணு சரி​பார்ப்​புக்​கான கடைசி தேதி ஆக.16-ம் தேதி என்று அறிவிக்​கப்​பட்​டது. வாடிக்​கை​யாளர்​கள் வசதிக்​காக, ஆக.23-ம் தேதி (நேற்​று) வரை நீட்​டிப்பு செய்​யப்​பட்​டது.

கடந்த வாரம் வரை தமிழகம் முழு​வதும் 93 சதவீதம் பேர் சரி​பார்ப்பை நிறைவு செய்​துள்​ளனர். இந்​நிலை​யில், மீத​முள்ள வாடிக்​கை​யாளர்​களும் சரி​பார்ப்பை நிறைவு செய்ய வசதி​யாக, மின்​னணு சரி​பார்ப்​புக்​கான அவகாசம் ஆக.31-ம் தேதி நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் கூறிய​போது, “அனைத்து வாடிக்​கை​யாளர்​களும் சரி​பார்ப்பை நிறைவு செய்ய வேண்​டும் என்ற நோக்​கில் இதற்​கான அவகாசம் தற்​போது ஆக.31-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இ-கேஒய்சி நடை​முறையை நிறைவு செய்​யா​விட்​டால், மானி​யத் தொகை ரத்து செய்​யப்​படும். புதிய சிலிண்​டர் முன்​ப​திவு செய்​யும்​போது, கணக்கு முடக்​கப்​பட்​ட​தாகக் காண்​பித்​து, முன்​ப​திவு நிராகரிக்​கப்​பட​வும்​ வாய்ப்​பு உள்​ளது” என்​றனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி