டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான கணினிவழி தேர்வு மற்றும் விரிவாக எழுதும் தேர்வு ஆகஸ்ட் 16 முதல் 21 வரை, தொடர்ந்து செப்டம்பர் 7 முதல் 12 வரை மற்றும் 19-ம்தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவுதளத்தின் மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இத்தேர்வு, உதவி பொறியாளர், வேளாண் விரிவாக்க அலுவலர், மருந்து ஆய்வாளர், தோட்டக்கலை அலுவலர், தொல்லியல் அலுவலர் ஜூனியர் போட்டோகிராபர் உள்பட 45 விதமான பதவிகளில் 508 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி