புதிய வழிகாட்டுதல்கள் வெளியான பிறகே பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2026

புதிய வழிகாட்டுதல்கள் வெளியான பிறகே பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

 

 பு​திய வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்ட பின்​னரே பெற்​றோர் ஆசிரியர் கழகத்​துக்கு புதிய நிர்​வாகி​கள் தேர்வு செய்​யப்பட வேண்​டும் என மாவட்ட முதன்மை கல்வி அதி​காரி​கள் மற்​றும் மாவட்ட கல்வி அலு​வலர்​களுக்கு திடீர் உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக மாநில பெற்​றோர் ஆசிரியர் கழகத்​தின் செயலர் ஏ.சத்​தி​ய​பா​மா, அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​கள் மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக் ​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பெற்​றோர் ஆசிரியர் கழக விதி​முறை​களின்​படி பள்ளி பெற்​றோர் ஆசிரியர் கழகத்​தின் பதவிக் காலம் மூன்று ஆண்​டு​கள் ஆகும்.

மூன்று ஆண்​டு​களுக்​குப் பிறகு பொதுக்​குழுக் கூட்​டம் நடத்தி புதிய நிர்​வாகி​கள் தேர்ந்​தெடுக்​கப்பட வேண்​டும். பள்ளி பெற்​றோர் ஆசிரியர் கழகம் உள்​ளிட்ட அனைத்து அமைப்​பு​களுக்​கு​மான வழி​காட்​டு​தல்​கள் புதுப்​பிக்​கப்பட உள்​ளன.

எனவே, மாநில பெற்​றோர் ஆசிரியர் கழகத்​தின் மூலம் திருத்​திய வழி​காட்​டு​தல்​களுக்​கான சுற்​றறிக்கை அனுப்​பப்​பட்ட பிறகு பள்ளி பெற்​றோர் ஆசிரியர் கழக அமைப்​புக்​கான புதிய நிர்​வாகி​களை தேர்ந்​தெடுக்​கும் நடை​முறை மேற்​கொள்​ளப்பட வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​யுள்ளார்​.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி