School Morning Prayer Activities - 27.08.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2026

School Morning Prayer Activities - 27.08.2026

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.08.2026

திருக்குறள்

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:481

குறள்:

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 


பொருள்:

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
பழமொழி :

Necessity is the mother of invention.

தேவையே கண்டுபிடிப்பின் தாய்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. 1. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்தக் காரியத்தையும் நான் செய்ய மாட்டேன். 

 2. பேச்சு ஒழுக்கம்: சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன். தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

பொன்மொழி : 

“கல்வி அறிவைத் தரும்; திறமை அந்த அறிவைச் செயலாக மாற்றும்.”

Thought for the Day :

“Skill is the bridge between a young person’s dream and achievement.”

பொது அறிவு : 

1.மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது? 

எலும்பு மஜ்ஜை. 

2. இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் எவ்வளவு? 

120 நாட்கள்.

English words :

1.Optimistic – Hopeful and confident about the future, நம்பிக்கையுடன் சிந்திப்பவர்.

2.Cooperative – Willing to work together with others, ஒத்துழைக்கும் தன்மையுடையவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

அந்தமான் மற்றும் இலட்சத்தீவுகள் இரண்டும் இந்தியாவின் கடல் எல்லை, இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் மிகவும் முக்கியமானவை.

NMMS :

MAT 

கொடுக்கப்பட்ட வரைபடத்தை கன சதுரமாக மடித்தால் எண் 5க்கு நேர் எதிரே உள்ள எண் எது? 


(1) 3. 

(2) 2. 

(3) 4. 

(4) 6. 


விடை: (2) 2

நீதிக்கதை

 நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம்


ஒரு சிறிய கிராமத்தில் அகிலேஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு நீச்சல் தெரியாது. நண்பர்கள் அனைவரும் நீச்சல் பயிற்சிக்குச் சென்றாலும், “எனக்கு நீச்சல் கற்றுக்கொள்ளத் தேவையில்லை” என்று அவன் நினைத்தான்.


ஒருநாள் அகிலேஷ் தனது நண்பர்களுடன் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தவறி தண்ணீரில் விழுந்தான். பயந்துபோன அவன் உதவிக்காகக் குரல் கொடுத்தான். 


அருகில் இருந்த நீச்சல் பயிற்சியாளர் உடனே வந்து அவனைப் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தார்.

அன்று அகிலேஷ் தனது தவறை உணர்ந்தான். மறுநாள் முதல் நீச்சல் பயிற்சிக்குச் செல்லத் தொடங்கினான்.


 பயிற்சியாளர் அவனுக்கு நீரில் பாதுகாப்பாக இருப்பது, முறையாக நீந்துவது, அவசர நேரத்தில் அமைதியாக இருப்பது போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தார்.


சில மாதங்களில் அகிலேஷ் நன்றாக நீந்தக் கற்றுக்கொண்டான். “நீச்சல் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல; நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் ஒரு முக்கியமான திறமை” என்பதை அவன் புரிந்துகொண்டான்.


அதன்பிறகு, தன்னுடைய நண்பர்களிடமும் நீச்சலை முறையாகப் பயிற்சி செய்து கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினான்.


நீதி: 

பயிற்சி திறமையை வளர்ப்பதோடு, நம்முடைய பாதுகாப்பிற்கும் உதவுகிறது. எந்தப் பயிற்சியையும் தகுதியான பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் கற்றுக்கொள்வது சிறந்தது.


இன்றைய செய்திகள்

27.08.2026

🗒️நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பேரிடர் மற்றும் வெள்ளத்தில், 105 இந்தியர்கள் உட்பட 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், 93 நேபாள குடிமக்களும் என மொத்தம் 384 பேர் காணாமல் போயுள்ளனர். திடீர் வெள்ளத்திற்கு காரணம் பனிமலை உருகி ஆற்றில் விழுந்தது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

🗒️ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உள்ளிட்ட 2 பேர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

🗒️செப்டம்பர் 1ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நதி நீரை  முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்.

🗒️தொழில்முறை சந்திப்புகளின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையை சேர்ந்த இளம் பயிற்சியாளர்கள் 
உடன் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரிலிருந்து  ‘ஐ.என்.எஸ். சுதர்ஷினி’ கப்பல்  புறப்பட்டது
  
*விளையாட்டுச் செய்திகள்*

🏀பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய ஜோடி உயர்வு.  


Today's Headlines

🗒️ In a sudden disaster and flooding in Nepal, a total of 384 people have gone missing, including 291 foreign tourists, among them 105 Indians and 93 Nepali citizens. The Nepalese government has announced that the sudden flooding was caused by a glacier melting and falling into the river

🗒️ Retired Judge R.N. Manjula and one other person have been appointed as members of the State Human Rights Commission.

🗒️ On September 1, Chief Minister Joseph Vijay will open the water from the Mettur Dam for irrigation.

🗒️ As part of professional visits, the Indian Navy’s training ship INS Sudarshini, carrying young trainees, has left Lisbon, Portugal.

Sports News

🏀 The Indian pair has moved up in the badminton rankings in the latest rankings list.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி