திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:50.இடன் அறிதல்
குறள் எண்:494
குறள்:
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
பொருள்:
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
One lie makes many.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்பொன்மொழி :
“இன்றே ஒரு திறமையை கற்றுக் கொள்; நாளை அது உன் அடையாளமாக மாறும்.” 🌟
Thought for the Day :
Ozone Day: “Heal the ozone, protect our home.”
பொது அறிவு :
1. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகள் எத்தனை?
316 ஊராட்சிகள்.
2. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் எத்தனை?
388 ஊராட்சி ஒன்றியங்கள்.
English words :
Ambiguous – Unclear – தெளிவற்ற
Meticulous – Careful – நுணுக்கமான
புவியியலும் சுற்றுசூழலும் :
காவிரி – தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று; காவிரி டெல்டா பகுதி தமிழகத்தின் முக்கிய வேளாண் பகுதியாகும். வேளாண்மைக்காக
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணை காவிரி ஆற்றின் குறுக்கே சோழ மன்னன் கரிகால சோழனால் கட்டப்பட்டது.கல்லணை கட்டப்பட்ட காலம் பொதுவாக கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.
NMMS :
MAT
அக்டோபர் 14 ன் 5 நாள்களுக்கு முன்னர் சனிக்கிழமை எனில் , அந்த மாதத்தின் கடைசி திங்கட்கிழமை எந்த தேதியில் வரும்?
(1) அக்டோபர் 25.
(2) அக்டோபர் 26.
(3) அக்டோபர் 24.
(4) அக்டோபர் 27.
விடை: (1) அக்டோபர் 25
செப்டம்பர் 16
நீதிக்கதை
🐦 வன்சிகாவின் அன்பு
ஒரு அழகான கிராமத்தில் வன்சிகா என்ற சிறுமி தன் தாயாருடன் வசித்து வந்தாள். அந்தக் கிராமம் முழுவதும் பலா மரங்கள், தென்னை மரங்கள், மாமரங்கள் என பசுமையாகக் காட்சியளித்தது. மஞ்சிகாவின் வீட்டைச் சுற்றிலும் பலவிதமான பறவைகளும் சிறிய விலங்குகளும் வசித்து வந்தன.
வன்சிகாவிற்கு பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தினமும் காலையில் வீட்டின் வாசலில் சிறிது அரிசியும் தண்ணீரும் வைத்து, “நீங்களும் சாப்பிடுங்கள்” என்று அன்புடன் கூறுவாள்.
ஒருநாள் வன்சிகாவின் உறவினர்கள் அனைவரும் அவளுடைய வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்த பலா மரத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறிய குருவி காயமடைந்த நிலையில் தரையில் விழுந்திருந்ததை வன்சிகா பார்த்தாள்.
“அம்மா! பாவம் இந்தக் குருவிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு உதவி செய்வோம்!” என்று வன்சிகா கவலையுடன் கூறினாள்.
தாயார் உடனே அவளுடன் சென்று குருவியை மெதுவாக எடுத்தார். அருகில் இருந்த கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
சில நாட்கள் வன்சிகா அந்தக் குருவிக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து அன்புடன் கவனித்தாள்.
ஒருநாள் குருவி முழுமையாகக் குணமடைந்தது. வன்சிகா அதைத் திறந்த வெளியில் கொண்டு சென்று பறக்க விட்டாள்.
அது வானத்தில் சிறகடித்துப் பறந்ததைப் பார்த்த வன்சிகா மிகவும் மகிழ்ந்தாள்.
அப்போது அவளுடைய தாயார் கூறினார்:
“வன்சிகா, மனிதர்களுக்கு மட்டும் உயிர் முக்கியமல்ல. பறவைகள், விலங்குகள் என எல்லா உயிர்களுக்கும் வலியும் பசியும் பயமும் மகிழ்ச்சியும் உண்டு. அவற்றிடம் அன்பாக நடந்து கொள்வது நம்முடைய கடமை .”
அருகில் இருந்த உறவினர்களும் வன்சிகாவின் செயலைப் பாராட்டினர்.“இனிமேல் நாங்களும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவும் தண்ணீரும் கொடுத்து அன்பாகப் பார்த்துக் கொள்கிறோம்,” என்று கூறினர்.
அன்றிலிருந்து அந்தக் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள உயிரினங்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கி, அவற்றைத் துன்புறுத்தாமல் அன்புடன் பாதுகாத்தனர்.
🌷 நீதி:
மனிதர்களைப் போலவே அனைத்து உயிரினங்களுக்கும் உயிரும் உணர்வுகளும் உள்ளன. எனவே பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் இரக்கமும் காட்டி, அவற்றை பாதுகாக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்



No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி